கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு


கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு
x

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்தார்.

கரூர்

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மஞ்சுளா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம், சார்பு நீதிபதி பாக்கியம் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து விரைவு, மகளிர் நீதிமன்றங்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மஞ்சுளா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கரூர் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மூலிகை பண்ணையை திறந்து வைத்து, மூலிகை செடியை நட்டு வைத்தார். தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள சாட்சிகள் விசாரணை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story