அகழாய்வில் அரியவகையான பொருட்கள் கண்டுபிடிப்பு


அகழாய்வில் அரியவகையான பொருட்கள் கண்டுபிடிப்பு
x

சிவகாசி அருகே அகழாய்வில் அரியவகையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விருதுநகர்

தாயில்பட்டி,

சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வின் மூலம் பண்டைய கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் கிடைத்து வருகிறது. 12-வது அகழாய்வு குழியில் தொடர்ந்து ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகின்றன. அதில் நேற்று சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தண்ணீர் அருந்துவதற்காக பயன்படுத்தப்பட்ட அரிய வகையான குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்டது. கற்காலத்தில் மனிதர்கள் கோடாரியாக பயன்படுத்திய கற்கால பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு நடக்கும் அகழாய்வு பணியில் இதுவரை 2,075 அரிய பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளன.


Next Story