மேட்டுப்பாளையம்- நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு


மேட்டுப்பாளையம்- நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2023 2:48 PM GMT (Updated: 31 Dec 2023 2:53 PM GMT)

மேட்டுப்பாளையம்- நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில் சேவை வருகிற 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை,

சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மேட்டுப்பாளையம்-நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில் சேவை வருகிற 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில் (எண்:06030), வரும் 28-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைதோறும், நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வந்தடையும்.

இதேபோல, மேட்டுப்பாளையம்-நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில் (எண்:06029), நாளை (ஜனவரி 1) முதல் 29-ம் தேதி வரை திங்கட்கிழமைதோறும், மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.

இந்த ரெயில்கள் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுதூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, சேரன்மகாதேவிஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story