கலப்பை எந்திரத்தை திருடிய விவசாயி கைது


கலப்பை எந்திரத்தை திருடிய விவசாயி கைது
x
தினத்தந்தி 12 Aug 2023 8:15 PM GMT (Updated: 12 Aug 2023 8:15 PM GMT)

நிலக்கோட்டை அருகே கலப்பை எந்திரத்தை திருடிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள தெற்கு விராலிப்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேலு (வயது 31). விவசாயி. இவர், தனது தோட்டத்தில் கலப்பை எந்திரத்தை வைத்திருந்தார். நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் திருடி சென்று விட்டார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் சண்முகவேலு புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சண்முகவேலுவின் தோட்டத்தில் டிராக்டர் வந்து சென்ற டயர் தடம் இருந்தது. இதேபோல் அந்த டிராக்டரில் இருந்து ஆயில் ஒழுகியது. இதனால் டிராக்டரில் பொருத்தி, கலப்பை எந்திரத்தை திருடி சென்றது தெரியவந்தது. டிராக்டரில் இருந்து ஒழுகிய ஆயில் தான் இந்த வழக்கில் துருப்புச்சீட்டாக அமைந்தது. ஒழுகிய ஆயிலை பின்தொடர்ந்து போலீசார் சென்றனர். அப்போது அந்த தோட்டத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரியூத்து கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆண்டிச்சாமி (47) என்பவரின் வீடு வரை ஆயில் ஒழுகியது தெரியவந்தது. இதனையடுத்து ஆண்டிச்சாமியை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது டிராக்டர் மூலம் கலப்பை எந்திரத்தை திருடியது தெரியவந்தது. அவரிடம் இருந்து டிராக்டர், கலப்பைஎந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டிச்சாமியை கைது செய்தனர்.


Next Story