விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கே.புதூரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் பாண்டியராஜ் (வயது 35). விவசாயி. இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மனஉளைச்சலில் காணப்பட்ட பாண்டியராஜ் சம்பவத்தன்று வீட்டில் பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாண்டியராஜ், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story