விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

கடையநல்லூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே கரடிகுளம் காளியம்மன் கோவில் பின் தெருவை சேர்ந்த காசி தேவர் (வயது 84), விவசாயி. இவர் வயது முதிர்வு காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்து பூச்சி மருந்து குடித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். காசி தேவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story