விவசாயி தற்கொலை


விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 23 July 2023 7:45 PM GMT (Updated: 23 July 2023 7:46 PM GMT)

பழனி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 50). விவசாயி. இவர் கோம்பைபட்டி பகுதியில் உள்ள தோட்டத்துச் சாலையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக இவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story