விவசாயி வீட்டில் நகை,பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு


விவசாயி வீட்டில் நகை,பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
x

கீழ்பென்னாத்தூர் அருகே விவசாயி வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரையடுத்த காட்டு நல்லான்பிள்ளை கிராமத்தில் வசிப்பவர் மணி(50).விவசாயி. நேற்று பகலில் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வழக்கம்போல் அருகில் உள்ள ஜன்னலுக்குள் வைத்துவிட்டு குடும்பத்துடன் விவசாய நிலத்திற்கு சென்று அங்கு விவசாய பணிகளை செய்துள்ளார் . பின்னர் பணிகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டை திறப்பதற்காக சாவியை எடுத்தபோது வீடு திறந்திருந்தது தெரியவந்தது. பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த தோடு, கம்மல்,செயின்,மோதிரம் ஆகியவை உட்பட15பவுனுக்கும் மேற்பட்ட நகைகளும்,ரூ. 5 லட்சமும் திருட்டுபோய் இருப்பதை அறிந்து மணியும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story