விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 March 2023 5:04 PM GMT (Updated: 13 March 2023 5:08 PM GMT)

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கண்களை துணியால் கட்டிக்கொண்டு அதிகாாிகளை தேடுவது போன்று செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அளித்த மனுக்களுக்கு உரிய மனுதாரர்களுக்கு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story