வெள்ளக்குடி வடிகால் வாய்க்கால் திருகு கதவணை சீரமைக்கப்படுமா?


வெள்ளக்குடி வடிகால் வாய்க்கால் திருகு கதவணை சீரமைக்கப்படுமா?
x

வெள்ளக்குடி வடிகால் வாய்க்கால் திருகு கதவணை சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

வலங்கைமான் அருகே ஏரிவேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வெள்ளக்குடி கிராமம் உள்ளது. இப்பகுதி விவசாய நிலங்களில் இருந்து தண்ணீரை வடிய வைப்பதற்காக பொய்கை ஆற்றங்கரை வடிகால் வாய்க்காலில் திருகு கதவணை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த திருகு கதவணை போதிய பராமரிப்பு இன்றி தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் திருகு கதவணை அருகே புதர் மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. வாய்க்காலும் தூர்வாரப்படவில்லை. ஆக்கிரமிப்புகளும் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை தூர்வாரி, திருகு கதவணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story