விவசாயிகள் சங்க கூட்டம்


விவசாயிகள் சங்க கூட்டம்
x

விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது

தூத்துக்குடி

ஏரல்ட:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கூட்டம் ஏரல் பஸ் நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் புவிராஜ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் கணபதி, மாவட்ட துணைச்செயலாளர் நம்பிராஜன், சி.ஐ.டி.யு. ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஒன்றிய தலைவராக பொன்ராஜ், செயலாளராக ராமச்சந்திரன், பொருளாளராக ராமலிங்கம், துணைத்தலைவர்களாக மாயாண்டி, செல்லத்துரை, துணைச்செயலாளர்களாக முத்துசுப்பிரமணியன், சுவாமிதாஸ் உட்பட 17 பேர் கொண்ட கமிட்டி தேர்ந்தெடுக்கபட்டது. முடிவில் மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.


Next Story