கிணற்றில் பெண் பிணம்


கிணற்றில் பெண் பிணம்
x

கிணற்றில் பெண் பிணமாக கிடந்தார்.

பெரம்பலூர்

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, எலந்தலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தியின் மனைவி மாரியாயி(வயது 50). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு துறையூர் தீயணைப்பு வீரர்கள் வந்து, மாரியாயியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story