பெண் தற்கொலை


பெண் தற்கொலை
x

குடிப்பழக்கத்தை கணவர் கைவிடாததால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் தாலுகா கொ.கீரனூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். வேன் டிரைவர். அவருடைய மனைவி அஞ்சலிதேவி (வயது 29). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாலகிருஷ்ணனுக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அதனை கைவிடுமாறு அஞ்சலிதேவி பலமுறை வலியுறுத்தினார். இருப்பினும் அவர் குடிப்பழக்கத்தை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பாலகிருஷ்ணன் மதுபோதையில் வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த அஞ்சலிதேவி, நேற்று காலை வீட்டின் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிமந்தையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் அஞ்சலிதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story