கொரோனாவால் பெற்றோரை இழந்த 39 குழந்தைகளுக்கு நிதி உதவி கலெக்டர் கார்மேகம் வழங்கினார்


கொரோனாவால் பெற்றோரை இழந்த  39 குழந்தைகளுக்கு நிதி உதவி  கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
x

கொரோனாவால் பெற்றோரை இழந்த 39 குழந்தைகளுக்கு நிதி உதவியை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

சேலம்

சேலம்,

39 குழந்தைகள்

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி குழந்தைகளுக்கான பி.எம்.கேர் திட்டத்துக்கான நிதியை காணொலி காட்சி மூலம் வழங்கினார். அதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த 39 குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர். அவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதிக்கான தபால் நிலைய கணக்கு புத்தகம், ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை, பிரதமரின் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் இளைஞர் நீதிக்குழு உறுப்பினர்கள் சுகன்யா, ஜெயப்பிரகாஷ், மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் ஜெயந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story