ஊர்க்காவல் படையினருக்கு நிதிஉதவி
தேனி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைப்பிரிவில் பணியாற்றி, பணியின்போது காயம் அடைந்தவர்களுக்கு நிதிஉதவி வழங்கப்பட்டது.
தேனி
பணியின் போது காயம் அடையும் ஊர்க்காவல் படையினருக்கு சேமநல நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைப்பிரிவில் பணியாற்றி, பணியின்போது காயம் அடைந்தவர்களுக்கு நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமை தாங்கி, ஊர்க்காவல் படை வீரர்கள் 7 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.70 ஆயிரம் நிதிஉதவிக்கான காசோலைகளை வழங்கினார். இதில், ஊர்க்காவல்படை சரக உதவி தளபதி அஜய்கார்த்திக் ராஜா, வட்டார தளபதி செந்தில்குமார், ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு இளமாறன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story