ராமேஸ்வரம்: கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் பயங்கர தீ விபத்து
பாம்பன் தென்கடல் பகுதியில் படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ராமேஸ்வரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் தென்கடல் பகுதியில் காலின்ஸ் என்பவருக்கு சொந்தமான படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 90 லட்ச ரூபாய் மதிப்பிலான படகு முற்றிலும் எரிந்து நாசமானது.
மின்கசிவு காரணமாகவே படகில் தீ பற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story