ஒரு வாரத்திற்கு பின் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்


ஒரு வாரத்திற்கு பின் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
x
தினத்தந்தி 7 Oct 2023 6:45 PM GMT (Updated: 7 Oct 2023 6:47 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் குறைந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

கடல் சீற்றம், சூறைக்காற்று

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் என மாவட்டம் முழுவதும் கடந்த 7 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் குறைந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலையில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் இன்று காலை கரை திரும்புவார்கள்.

இலங்ைக கடற்படை

இதே போல் பாம்பன், மண்டபம் என ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஏராளமான பைபர் படகுகள் மற்றும் நாட்டு படகுகளிலும், சிறிய வத்தைகளிலும் வழக்கம் போல் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

ஒரு வாரத்திற்கு பிறகு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றாலும் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கும் மற்றும் கைது நடவடிக்கைக்கும் பயந்து ஏராளமான படகுகள் நேற்று ராமேசுவரத்திற்கும், பாம்பனுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியிலேயே மீன் பிடித்து கொண்டிருந்தன.


Next Story