உறியடி நிகழ்ச்சி
தியாகதுருகத்தில் உறியடி நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சாமிக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது.
மாலையில் கோவில் வளாகத்தில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை யாதவர் சமூகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Related Tags :
Next Story