சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி


சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி
x

சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 35). கூலித் தொழிலாளியான இவர் நேற்று மாலை விக்கிரமங்கலம் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். கொலையனூர் பிரிவு பாதை அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராத விதமாக சங்கரின் மோட்டர் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சங்கரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சங்கரின் மனைவி ரேகா அளித்த புகாரின்பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி வழக்குப்பதிவு செய்து, சரக்கு ஆட்டோ டிரைவர் பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்திய வருகின்றனர்.


Next Story