மோட்டார்சைக்கிளில் இருந்துதவறி விழுந்த தொழிலாளி பலி


மோட்டார்சைக்கிளில் இருந்துதவறி விழுந்த தொழிலாளி பலி
x

ெபரியகுளம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தேனி

தேனி அருகே உள்ள அன்னஞ்சியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 49). இவர், அங்குள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர், மோட்டார் சைக்கிளில் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். தனியார் மாந்தோட்டத்திற்கு அருகே வந்தபோது, திடீரென மோட்டார்சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

இதில் தவறி கீழே விழுந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story