பவானிசாகர் அணையில் இருந்துகீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு


பவானிசாகர் அணையில் இருந்துகீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
x

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கடந்த 19-ந் தேதி காலை 11 மணிக்கு கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து கடந்த 20-ந் தேதி இரவு 8 மணி நிலவரப்படி கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரில் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

கடந்த 21-ந் தேதி மாலை 4 மணி நிலவரப்படி கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,350 கன அடியாகவும், நேற்று முன்தினம் மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,500 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டது.

அதிகரிப்பு

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,800 கன அடி தண்ணீர் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்டது. இது நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அணையின் நீர்மட்டம் 81.11 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 389 கன அடி தண்ணீர் வந்தது. பவானி ஆற்றிலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. வினாடிக்கு 850 கனஅடியில் இருந்து 1,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.


Related Tags :
Next Story