தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது


தூத்துக்குடியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மீளவிட்டான் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகன் ஜெகதீஷ் (வயது 21). இவர் கே.டி.சி.நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற ஜெகதீசை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story