குப்பைவாரும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு


குப்பைவாரும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு
x

ஆற்காட்டில் குப்பைவாரும் பணி தனியாரிடம் ஒப்படைக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராணிப்பேட்டை

ஆற்காடு நகராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகரமன்ற உறுப்பினர் பொன்.ராஜசேகர் பேசுகையில் இந்த நகர மன்ற கூட்ட அரங்கிற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அரங்கம் என்று பெயர் சூட்டிய நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோருக்கு நகர மன்ற உறுப்பினர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

கூட்டத்தில் நகரில் உள்ள 30 வார்டுகளிலும் குப்பை வாரும் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது, நகராட்சி குப்பை அள்ளும் வாகனங்களை வாடகைக்கு விடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story