தங்கும் விடுதியில் பெண் மர்ம சாவு


தங்கும் விடுதியில் பெண் மர்ம சாவு
x

வேளாங்கண்ணி தங்கும் விடுதியில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி தங்கும் விடுதியில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் மர்ம சாவு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள ஆலமழை நடுத்தெருவைச் சேர்ந்தவர் கவுரி (வயது 58). இவர் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வேலை பார்த்து வந்தாா். இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த 40 வயது ஆணுக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இருவரும் அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.கவுரியுடன் தங்கியிருந்த அந்த ஆண் காலை எழுந்து பார்த்தபோது வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்தநிலையில் மர்மமான முறையில் கவுரி பிணமாக கிடந்துள்ளார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து விடுதி ஊழியர்கள் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவுரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுரியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story