3 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது


3 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
x

3 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

நாகப்பட்டினம்

வேதாரண்யம் தாலுகா பகுதியில் 3 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அவர்கள் 3 பேரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

3 பேருக்கு நல்லாசிரியர் விருது

நாகை மாவட்டம் தகட்டூர் ராமகோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன், கடினல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன், ஆயக்காரன்புலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட் ஆகிய 3 பேருக்கும் இந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

தகட்டூர் ராமகோவிந்தன்காடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியை மீண்டும் ஒரு மாணவனோடு தொடங்கி தற்போது 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் பயில்வதற்கு பெரும் முயற்சி எடுத்தவர் சுப்பிரமணியன். இவர் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

கடினல்வயல் உதவி தலைமையாசிரியர் சிவகுருநாதன். இவர் 34 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்து தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மாநில, மாவட்ட தமிழாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் கருத்தாளராக உள்ளார்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட். இவர் 18 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். விருது பெறும் 3 ஆசிரியர்களையும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். விருது பெறும் ஆசிரியர்கள் 3 பேரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.


Related Tags :
Next Story