அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

சோளிங்கரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் டெண்டர் விடும் பணி நடந்தது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களுக்கு பணிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஒப்பந்ததாரர் ஒருவர் தனக்கு தான் இந்த பணிகளை வழங்க வேண்டும் என ஒன்றியக்குழு தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் டெண்டர் விடும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. ஒப்பந்ததாரர் உடன் இருந்த நபர் ஒன்றியக்குழு தலைவர் சொன்ன பிறகும் ஏன் இன்னும் டெண்டர் விடும் பணியை ரத்து செய்யவில்லை என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை சரமாரியாக தாக்கினார்.

அந்த நபரை கைது செய்யக் கோரியும், அரசு ஊழியர்களுக்கு பணியின் போது பாதுகாப்பு வழங்கக்கோரியும் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story