அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

வேலூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாநில கல்வித்துறை நிர்வாக ஊழியர் சங்க தலைவர் சேகர் கோரிக்கை குறித்து சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story