அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 March 2023 6:45 PM GMT (Updated: 21 March 2023 6:45 PM GMT)

கீழ்வேளூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஓய்வூதிய தொகை அரசு உத்தரவுபடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் பாரி தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் வளர்மாலா, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் ராஜு உள்பட பலா் கலந்து கொண்டனர். இதேபோல் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்குஅரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் அருளேந்திரன் தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், சத்துணவு ஊழியர், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story