திடீரென விழுந்த அரசு பள்ளி மேர்கூரை - மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
காரைக்கால் அடுத்த தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
காரைக்கால்,
காரைக்கால் அடுத்த தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .பள்ளியில் இன்று, பள்ளி தொடங்கியவுடன் சிறிது நேரத்தில் பள்ளி கட்டடத்த்தில் தட்டச்சு பயிற்சி வகுப்பறை மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது.
இந்த வகுப்பறையில் மாணவர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.தொடர்ந்து இடிந்து விழுந்த பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story