காந்தி பிறந்த நாளையொட்டி கிராமசபை கூட்டம்


காந்தி பிறந்த நாளையொட்டி கிராமசபை கூட்டம்
x

காந்தி பிறந்த நாளையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் ஒன்றியத்துக்குட்பட்ட கோவிந்தபுத்தூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி கலந்து கொண்டார். மாவட்டங்களில் மற்ற கிராம ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கிராம ஊராட்சி, நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்டவை குறித்தும், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அதன் மூலம் பயன் பெறுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story