அரசு பஸ்சில் தவறவிட்ட ரூ.12 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு


அரசு பஸ்சில் தவறவிட்ட ரூ.12 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு
x

அரசு பஸ்சில் தவறவிட்ட ரூ.12 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது

திருச்சி

திருச்சி, மே.25-

சென்னையை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35). இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். திருச்சி தில்லைநகரில் உள்ள மாமனார் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்திருந்தார். நேற்று முன்தினம் திருச்சி கண்டோன்மெண்ட் பஸ் நிறுத்தத்தில் குடும்பத்தோடு சத்திரம் செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த அரசு பஸ்சில் ஏறி குடும்பத்தோடு சத்திரம் பஸ் நிலையத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் அந்த பஸ்சை இயக்கி வந்த டிரைவர் ஜெகநாதன் (45), கண்டக்டர் ராஜா (30) ஆகிய இருவரும் பஸ்சை சுத்தம் செய்வதற்காக பார்த்துள்ளனர். அப்போது பஸ்சில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அவற்றில், ரூ.12 ஆயிரம் மற்றும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவை இருந்தன. இதைத் தொடர்ந்து பணத்தையும், பொருட்களையும் டிரைவர் மற்றும் கண்டக்டர் சேர்ந்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், அந்த பணம் மற்றும் மணிபர்ஸ் கோபிநாத்துக்கு சொந்தமானது என தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் வரவழைத்து ரூ.12 ஆயிரம் மற்றும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவைகளை ஒப்படைத்தனர். அரசு பஸ்சின் டிரைவர் ஜெகநாதன், கண்டக்டர் ராஜா ஆகியோரின் நேர்மையை போலீசார் பாராடினர்.


Next Story