சென்னையில் 8-ந் தேதி நடக்கிறது: அ.தி.மு.க. சார்பில் சர்வதேச மகளிர் தினம் -எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு


சென்னையில் 8-ந் தேதி நடக்கிறது: அ.தி.மு.க. சார்பில் சர்வதேச மகளிர் தினம் -எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
x

சென்னையில் 8-ந் தேதி நடக்கிறது அ.தி.மு.க. சார்பில் சர்வதேச மகளிர் தினம் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு.

சென்னை,

அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகைக்கு அருகில் உள்ள ஹேமமாலினி திருமண மண்டபத்தில், வருகின்ற 8-ந்தேதி காலை 9.30 மணியளவில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். மகளிரணி சார்பில் நடைபெற உள்ள சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகளும், வீராங்கனைகளும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story