அன்னவாசல் பகுதியில் கனமழை
அன்னவாசல் பகுதியில் கனமழை பெய்தது.
புதுக்கோட்டை
அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது. இந்தநிலையில் நேற்று இரவு அன்னவாசல், இலுப்பூர், சித்தன்னவாசல், குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி, புதூர், வயலோகம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதனால் பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்பட்டது. குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story