கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை ?


கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை ?
x

கனமழை காரணமாக திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்,

தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று இரவு இடி மின்னலுடன் நள்ளிரவை தாண்டியும் கனமழை பெய்தது. பின்னர் வானம் மேகமூட்டத்துடன் லேசான தூறல் விழுந்த படி அதிகாலை முதல் கால நிலை காணப்படுகிறது.

இதனிடையே கனமழை காரணமாக திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படவில்லை.


Next Story