ஹெல்மெட் அபராதம் என்பது மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் முடிவு - சென்னை காவல்துறை


ஹெல்மெட் அபராதம் என்பது மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் முடிவு  - சென்னை காவல்துறை
x

சென்னையில் இரு சக்கர வாகனத்தின் பின்னாள் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மட் அணிந்து வருவது கட்டாயம் என ஏற்கனவே விதி இருந்தாலும் பெரும்பாலோர் இதைக் கடைப்பிடிப்பதில்லை.

சென்னை,

சென்னையில் இரு சக்கர வாகனத்தின் பின்னாள் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மட் அணிந்து வருவது கட்டாயம் என ஏற்கனவே விதி இருந்தாலும் பெரும்பாலோர் இதைக் கடைப்பிடிப்பதில்லை.

சாலை விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டபோது தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களே அதிக அளவில் உயிரிழப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று முதல் இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாரின் தீவிர தணிக்கையால் இரு சக்கர வாகனம் ஓட்டும் பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிந்து வந்தாலும், பின்னால் அமர்ந்து வருபவர்கள் அதைக் கடைப்பிடிப்பதில்லை. இதனைத் தொடர்ந்து, இன்று முதல் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டுமெனவும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும், கடந்த சனிக்கிழமை சென்னை போக்குவரத்துக் காவல்துறையினர் அறிவித்தனர்.

சென்னை முழுதும் போக்குவரத்து போலீசார் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓடியதாக இன்று மட்டும் 1278 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரட்கர் கூறியதாவது:-

ஹெல்மெட் அபராதம் என்பது மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் முடிவு. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story