ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது நண்பர் ஐகோர்ட்டில் மனு


ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது நண்பர் ஐகோர்ட்டில் மனு
x

கோப்புப்படம்

ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது நண்பர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யபட்ட

அவரது கணவர் ஹேம்நாத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னைஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது நண்பர் சையத் ரோகித் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பான அந்த மனுவில், ஹேம்நாத் தனது நீண்டகால நண்பர். அவர் மூலம் சித்ராவை தமக்கு நன்றாக தெரியும். சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல் துறை விசாரணையின்போது சாட்சியம் அளித்துள்ளேன். ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் தாம் மட்டுமே சாட்சியம் அளித்தேன். இதற்காக ஹேம்நாத் தம்மை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். ஹேம்நாத்தால் தம்முடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஹேம்நாத்

தன்னுடைய பணம் மற்றும் அடி ஆட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருகிறார். அவரை வெளியே சுதந்திரமாக நடமாடவிட்டால் சாட்சிகளை கலைப்பார். ஐகோர்ட்டின் ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஹேம்நாத், சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story