ரெயிலில் அடிபட்டு ஓட்டல் தொழிலாளி பலி


ரெயிலில் அடிபட்டு ஓட்டல் தொழிலாளி பலி
x

கொடைரோடு அருகே ரெயிலில் அடிபட்டு ஓட்டல் தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன்கோட்டையை சேர்ந்தவர் பாலகுரு. அவருடைய மகன் ராஜபாண்டி (வயது 28). ஓட்டல் தொழிலாளி. இவர், கொடைரோட்டை அடுத்த மாலையகவுண்டன்பட்டி பிரிவு அருகே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொடைரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ராஜபாண்டியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிபட்டு ராஜபாண்டி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.


Next Story