மனைவிக்கு குழந்தை பிறந்ததை பார்த்துவிட்டு வந்த கணவன் பலி; சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்


மனைவிக்கு குழந்தை பிறந்ததை பார்த்துவிட்டு வந்த கணவன் பலி; சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்
x

கள்ளக்குறிச்சி அருகே தன் மனைவிக்கு பிறந்த குழந்தை பார்த்துவிட்டு வந்த கணவன் கீழே விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ் (வயது 25). இவருக்கு அகில்மணி என்ற பெண்ணுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த அகில்மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியில் சுரேஷ் தனது குழந்தையை பார்ப்பதற்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு பைக்கில் வந்தார். குழந்தையை பார்த்து விட்டு மீண்டும் தன் சொந்த ஊரான தொட்டியும் கிராமத்திற்கு குதிரைசந்தல் வழியாக வந்துள்ளார்.

அப்போது பழனிச்சாமி என்பவர் நிலத்தின் அருகே வரும் போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கச்சிராயபாளையம் போலீசார் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

பிறந்த குழந்தையும் இறந்த தந்தையும் ஒரே மருத்துவமனையில் இருப்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Related Tags :
Next Story