"தமிழர்களின் பெருமையை உலகம் அறியும் வகையில் செயல்படுவேன்" - சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி


தமிழர்களின் பெருமையை உலகம் அறியும் வகையில் செயல்படுவேன் - சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
x

தமிழ்நாடு-ஜார்கண்ட் இடையே நல்லுறவை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள இருப்பதாக சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார்.

சென்னை,

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்க உள்ளார். இதற்காக அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழர்களின் பெருமையை உலகம் அறியும் வகையில் செயல்படுவேன் " என்று தெரிவித்தார். மேலும் ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்றுவது தான் தனது குறிக்கோள் என குறிப்பிட்ட அவர், கவர்னராக பதவியேற்ற பின், தமிழ்நாடு-ஜார்கண்ட் இடையே நல்லுறவை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள இருப்பதாக உறுதியளித்தார்.



Next Story