எட்டயபுரம் ஜமாபந்தியில் 12 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு


எட்டயபுரம் ஜமாபந்தியில்  12 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு
x

எட்டயபுரம் ஜமாபந்தியில் 12 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி ஜமாபந்தி தொடங்கி நடந்து வந்தது. இந்த தாலுகாவுக்கு உட்பட்ட கிராம மக்கள் ஜமாபந்தியில் பங்கேற்று பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். ஜமாபந்தி நேற்று முடிவடைந்தது. கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் நடந்த ஜமாபந்தியில், பட்டா மாறுதல், முதியோர், ஆதரவற்றோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 402 மனுக்கள் பெறப்பட்டன.

இதில், நத்தம் சிட்டா நகல் 3 பேருக்கும், பட்டா மாறுதல் உத்தரவு 12 பேருக்கும், முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை 5 பேருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உதவிகலெக்டர் வழங்கினார். இதில், எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரகுபதி, வட்டத்துணை ஆய்வாளர் கோட்டைச்சாமி, நில அளவையர் கார்த்திக், எட்டயபுரம் வருவாய் ஆய்வாளர் சித்ராதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story