ஈரோடு மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில்  7 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 Oct 2022 7:30 PM GMT (Updated: 15 Oct 2022 7:30 PM GMT)

கொரோனா

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 345 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 482 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 622 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 16 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். தற்போது 126 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


Related Tags :
Next Story