கோயம்பேடு மார்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி


கோயம்பேடு மார்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை உயர்வு -  பொதுமக்கள் அதிர்ச்சி
x

கோயம்பேடு மார்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோயம்பேடு,

சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து இன்று 400 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது.

தினசரி 500 லாரிகளில் வந்த காய்கறிகள் இன்று 400 லாரிகளில் வந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காய்கறிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. வரத்து குறைவால் தக்காளி, பீன்ஸ், முருங்கைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனை கடைகளில் ரூ. 19-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ. 35-க்கும், கிலோ ரூ. 30-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ. 55-க்கும், கிலோ ரூ. 30-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் ரூ. 60-க்கும், ரூ. 50-க்கு விற்கப்பட்ட ஊட்டி கேரட் ரூ. 70-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வரத்து அதிகரிப்பு காரணமாக கத்தரிக்காய், சுரக்காய், கோவக்காய் ஆகிய காய்கறிகள் மொத்த விற்பனை கடைகளில் கிலோ ரூ. 10-க்கு விற்கப்படுகிறது.


Next Story