பழனியில், வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


பழனியில், வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

பழனியில், வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

சென்னை ஐகோர்ட்டில், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி பழனியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மூத்த வக்கீல் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மத்திய அரசும், நீதித்துறையும் சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் செல்லத்துரை, பாலுசாமி, அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story