சத்தியமங்கலம் மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.580-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.580-க்கு ஏலம்
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.580-க்கு ஏலம் போனது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.580-க்கும், முல்லை ரூ.160-க்கும், காக்கடா ரூ.250-க்கும், செண்டுமல்லி ரூ.60-க்கும், பட்டுப்பூ ரூ.78-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.


Related Tags :
Next Story