போடியில் வீடு, பொது கழிப்பறையில் புகுந்த பாம்புகள்


போடியில்  வீடு, பொது கழிப்பறையில் புகுந்த பாம்புகள்
x

போடியில் வீடு, பொது கழிப்பறையில் பாம்பு புகுந்தது

தேனி

போடி அருகே உள்ள முத்துக்கோம்பை புலத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவரது தோட்டத்து வீட்டில் பாம்பு ஒன்று புகுந்தது இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெகதீஸ்வரன் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் போராடி அங்கு பதுங்கி இருந்த சுமார் 6 அடி நீள நல்ல பாம்பு பிடித்தனர்.

இதேபோல் போடி பார்க் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பொது கழிப்பறையில் பாம்பு ஒன்று புகுந்தது ‌இதைக்கண்ட பொதுமக்கள் உடனே போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர். பிடிபட்ட பாம்பு சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஆகும்.


Next Story