தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை


தேனி மாவட்டத்தில்  கொட்டித் தீர்த்த மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை
x

தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது

தேனி

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ரெட் அலார்ட்' அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று அதிகாலையில் இருந்தே தேனி மாவட்டத்தின் பல இடங்களிலும் பலத்த மழை பெய்தது. காலை 6 மணி வரை மழை நீடித்தது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். தொடர்ந்து மாலை வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஆறு, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


Next Story