திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2.40 கோடி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில்   உண்டியல் வருமானம் ரூ.2.40 கோடி
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2.40 கோடி கிடைத்துள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2.40 கோடி கிடைத்துள்ளது.

உண்டியல்கள் எண்ணிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகைகள் மாதம் இரண்டு முறை எண்ணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த மாதம் முதல் முறையாக கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்டது. 2-வது முறையாக நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் கார்த்திக் தலைமையில், தக்கார் பிரதிநிதியும் ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில் சங்கரன்கோவில் துணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், திருச்செந்தூர் கோவில் அலுவலக கண்காணிப்பாளர் சீதாலட்சுமி, ஆய்வர்கள் செந்தில்நாயகி, சண்முகராஜா, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரபணிக்குழுவினர், தூத்துக்குடி ஆஞ்சநேயர் உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.

ரூ.2.40 கோடி வருவாய்

இதில் ரூ.70 லட்சத்து 47 ஆயிரத்து 46 கிடைத்தது. கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்டதில் ரூ.1 கோடியே 69 லட்சத்து 54 ஆயிரத்து 36 கிடைத்தது. ஆக மொத்தத்தில் இந்த மாதம் இரண்டு முறை எண்ணப்பட்டதில் ரூ.2 கோடியே 40 லட்சத்து ஆயிரத்து 82 கிடைத்துள்ளது.

அதேபோல் மொத்தத்தில் தங்கம் 2 கிலோ 435 கிராமும், வெள்ளி 15 கிலோ 960 கிராமும் கிடைத்தது. மேலும் வெளிநாட்டு நோட்டுகள் 359 கிடைத்துள்ளது.


Next Story