தூத்துக்குடியில்கஞ்சா விற்றவர் கைது


தூத்துக்குடியில்கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 9 March 2023 6:45 PM GMT (Updated: 9 March 2023 6:47 PM GMT)

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெர்மல்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தெர்மல்நகர் துறைமுகம் பஸ் நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்ததாக தூத்துக்குடி புதிய துறைமுகம் தொழிலாளர் காலனியை சேர்ந்த மொட்டைச்சாமி மகன் இசக்கிராஜா (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story