96 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு


96 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு
x

ஆலங்குளத்தில் 96 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு வழங்கப்பட்டது.

தென்காசி

ஆலங்குளம்:

தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஆலங்குளம் கால்நடை மருந்தகத்தில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆலங்குளம் ஒன்றிய குழுத்தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத் துறை நெல்லை மண்டல இயக்குனர் பொன்னுவேல், ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், பேரூராட்சி தலைவர் சுதா, பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்புத் துறை தென்காசி உதவி கோட்ட இயக்குனர் வெங்கட்ராமன் திட்டம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு, 96 பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகளை வழங்கி பேசினார்.

இதில் கால்நடை மருத்துவர்கள் ராஜ ஜூலியட், ராமசெல்வம், ரமேஷ், சந்திரன், செல்வராணி, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-


Next Story