கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
x

வடக்குமாங்குடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது

தஞ்சாவூர்

மெலட்டூர்;

அம்மாப்பேட்டை ஒன்றியம், வடக்குமாங்குடி ஊராட்சி, பெருங்கரை கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் கலைச்செல்விகனகராஜ் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர் சவுந்தரராஜன், கால்நடை உதவியாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் 50- க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர். முகாமில் வடக்குமாங்குடி, பெருங்கரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை வடக்குமாங்குடி ஊராட்சிமன்றம் மற்றும் கால்நடைதுறையினர் செய்து இருந்தனர்.


Next Story